உலக சுற்றாடல் தினம் – 2025

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதும் தூய்மையானதுமான சுற்றாடலை உருவாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டுவருதல் என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நகராட்சி மன்றத்திற்குட்பட்ட மண்டுவில் பிரதேசத்தில் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை சேகரிக்கும் செயற்பாடானது சபையின் செயலாளர் திரு செ.நிசான் அவர்களின் தலைமையில் 2025.06.04 அன்று காலை 10.00 மணியளவில் செல்விநாயகர் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுசுகாதாரப் பரிசோதகர், உள்ளுராட்சி உதவியாளர், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர், சபையின் ஊழியர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சனசமூக நிலைய பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்துடன் கழிவுகளை சிறந்தமுறையில் முகாமைசெய்வது தொடர்பாகவும் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டதுடன் மரக்கன்றுகள் வளர்ப்பதற்கான பைகளும் பொதுமக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.