உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதும் தூய்மையானதுமான சுற்றாடலை உருவாக்கும் முயற்சியின் ஓர்அங்கமாக சுத்தப்படுத்தும் செயற்பாடானது சபையின் செயலாளர் திரு செ.நிசான் அவர்களின் தலைமையில் 2025.06.06 அன்று காலை 9.00 மணியளவில் லிகோரியார் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது. கணக்காளர், பொதுசுகாதாரப் பரிசோதகர், உள்ளுராட்சி உதவியாளர் உட்பட சபையின் உத்தியோகத்தர்களும், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரும், சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகளும் இணைந்து கடற்கரைச் சுற்றாடலை தூய்மைப்படுத்தினார்கள்.
உலக சுற்றாடல் தினம் – 2025
