உலக சுற்றாடல் தினம் – 2024

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்ரிக் பயன்பாட்டினால் சுற்றாடலுக்கும் உயிரினங்களுக்கும் ஏற்படும் தீங்குகள் மற்றும் காலநிலை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான செயலமர்வானது யாஃ சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 2024.05.31ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றது. இச்செயலமர்வில் World Vision நிறுவன உத்தியோகத்தர்கள், சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர், பாடசாலை அதிபர், மாணவர்கள் மற்றும் பெற்றோர் போன்றோரும் பங்குபற்றியிருந்தனர்.

IMG-20240531-WA0004
IMG-20240531-WA0021
IMG-20240531-WA0005

கழிவுமுகாமைத்துவ திட்டம் தொடர்பான களவிஜயம்

World Vision நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் இயங்கிவரும் PHINLA செயற்றிட்டத்தின் செயற்பாடுகளைப் பார்வையிடுவதற்கான களவிஜயமானது 2024.05.29 அன்று இடம்பெற்றது. இக்களவிஜயமானது திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான சிறு கலந்துரையாடலுடன் ஆரம்பமானது. 

இந்நிகழ்வில் மேல்மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ மேலாண்மை மத்திய நிலைய தவிசாளர், மேல்மாகாண உள்ளூராட்சி  ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி  உதவி ஆணையாளர்கள், வத்தளை பிரதேசசபை, யா-எல நகரசபைச் செயலாளர் மற்றும் சபை உத்தியோகத்தர்கள், நகராட்சிமன்ற நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் சபை உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், வேல்ட் விசன் நிறுவனகுழுவினர் போன்றோரும் பங்குபற்றியிருந்தனர்.

IMG-20240603-WA0013
IMG-20240603-WA0009

நகராட்சி மன்ற ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நடமாடும் சேவை – 2024.05.16

நகராட்சி மன்ற ஆளுகைக்குட்பட்ட 03ம் வட்டாரம் (கெருடாவில்) பிரதேசத்தில் ஆதனவரி நிலுவைகளை அறவிடும் நோக்கில் நடமாடும் சேவையானது 2024.05.16 அன்று பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நடமாடும் சேவையில் பெருமளவு பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதனவரி நிலுவைகள், வியாபார உரிமக் கட்டணங்கள், துவிச்சக்கர வண்டி உரிமக் கட்டணங்கள், வளர்ப்பு நாய் உரிமக் கட்டணங்கள் என்பவற்றை செலுத்தி ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

IMG-20240516-WA0010

கழிவுகளை சேகரிக்கும் வளநிலையம்

நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் உக்கக்கூடிய மற்றும் உக்காத கழிவுகளை சிறந்த முறையில் அகற்றுவதற்கும், அதனை நகரசபையானது சிறப்பாக முகாமை செய்வதற்கும் ஏற்றவகையில் எமது வளநிலையத்தில் நிறகுப்பைக்கூடைகள் வைக்கப்பட்டுள்ளது. 

இவ்வள நிலையத்தில் 2024.05.01ஆம் திகதி முதல் வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரமும் கழிவுகளை ஒப்படைக்கமுடியும்.

               பச்சை – உக்கக்கூடிய கழிவுகள்

               செம்மஞ்சள் - பிளாஸ்ரிக் கழிவுகள்

               நீலம் - கடதாசிக் கழிவுகள்

               சிவப்பு – கண்ணாடிக் கழிவுகள்

               கபிலம் - உலோகக் கழிவுகள்

               சாம்பல் - இலத்திரனியல் கழிவுகள்

               மஞ்சள் - தொற்றுக்கழிவுகள் (பம்பஸ்)


எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க கழிவுகளை உரியமுறையில் அகற்றுவோம்.

Farm to Gate செயலியில் பதிவு செய்தல்

வடக்கு மாகாணத்தின் உற்பத்திகளுக்கும் சேவைகளுக்குமான இலவச இணையவழி சந்தை வாய்ப்புக்களுக்கு வசதியளிக்கும் வகையில் Farm to Gate செயலி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்செயலியின் மூலம் உற்பத்திகள் மற்றும் சேவைகளை விற்பனை செய்பவரும் நுகர்வோரும் நேரடியாக தொடர்புகொண்டு விற்பனை/ கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும்.

www.farmtogate.org எனும் இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலம் சுயமாக தங்கள் பதிவுகளை மேற்கொள்ளமுடியும். அல்லது அருகிலுள்ள உள்ளுராட்சி மன்றத்திற்குச் சென்று பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Farm to Gate செயலி மூலம் பதிவுகளை மேற்கொண்டு பயன்பெறுவீராக...

போக்குவரத்து நெருக்கடி தொடர்பான கலந்துரையாடல்

சாவகச்சேரி நகர்ப்பகுதி வீதியோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதால் ஏற்படுகின்ற போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வுகாணுவதற்கான கலந்துரையாடல் 2024.04.08 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் நகராட்சி மன்ற அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மன்றின் செயலாளர், கணக்காளர், பிரதேச செயலக கணக்காளர், சபையின் நிர்வாக உத்தியோகத்தர், உள்ளுராட்சி உதவியாளர், பொதுச்சுகாதாரப் பரிசோதகர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வருமானப் பரிசோதகர், உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதி ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும், பொலிஸாரால் அடையாளப்படுத்தி தரப்படும் இடங்களில் “No Parking” பலகையிடல், வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் கலந்துரையாடி வீதிகளுக்கு மீள்கோடிடல், நகர்ப்பகுதிக்கு அண்மையில் வாகனத்தரிப்பிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற தீர்வுகள் எட்டப்பட்டன. நிலைமையை ஆராய்வதற்கான களத்தரிசிப்புடன் கலந்துரையாடல் நிறைவுபெற்றது.

 

தொற்றா நோய்களுக்கான மருத்துவமுகாம்

சாவகச்சேரி நகராட்சி மன்றில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கான தொற்றாநோய் தொடர்பான பரிசோதனை சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் 2024.03.01 அன்று அலுவலகத்தில் நடைபெற்றது. 

 

வடக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு

வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளுராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளங்களின் அங்குரார்ப்பண நிகழ்வானது 2024.03.01 அன்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால், கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், UNDP - CDLG திட்ட முகாமையாளர், மாகாண இறைவரித் திணைக்கள ஆணையாளர், உள்ளுராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளுராட்சி சபைச் செயலாளர்கள், இணையத்தள வடிவமைப்பில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளுராட்சித் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சாவகச்சேரி நகரசபைக்குரிய இணையத்தள முகவரி – chavakachcheri.uc.gov.lk

 

உள்ளூராட்சி வார பரிசளிப்பு நிகழ்வு – 2023

உள்ளூராட்சி வார விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி மகுடம் சூடியவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு எமது மன்றத்தின் பொன்விழா மண்டபத்தில் 2024.02.21 அன்று மன்ற செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.பொ.ஸ்ரீவர்ணன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.க.சந்திரகுமார் -  செயலாளர்,  சாவகச்சேரி பிரதேச சபை அவர்களும், அவர்களுடன் சபையின் சட்ட ஆலோசகர் திருமதி.அ.சிவவாணி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

259A6919
259A6921
259A6922
259A6944
259A6968

 

தன்னியமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம்

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் சாவகச்சேரி பொதுநூலகத்தை தன்னியமயமாக்கல் திட்டத்தின் ஒருபகுதி நடவடிக்கைக்காக மற்றும் பயிற்சி வழங்கல், பார்வையிடல் தொடர்பாக தேசிய நூலகம், நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபை மற்றும் ருNனுP நிறுவன உ யர் அதிகாரிகள் நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

FB_IMG_1709185503383
FB_IMG_1709185508405