உலக சுற்றாடல் தினம் – 2025

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதும் தூய்மையானதுமான சுற்றாடலை உருவாக்கும் முயற்சியின் ஓர்அங்கமாக சுத்தப்படுத்தும் செயற்பாடானது சபையின் செயலாளர் திரு செ.நிசான் அவர்களின் தலைமையில் 2025.06.06 அன்று காலை 9.00 மணியளவில் லிகோரியார் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது. கணக்காளர், பொதுசுகாதாரப் பரிசோதகர், உள்ளுராட்சி உதவியாளர் உட்பட சபையின் உத்தியோகத்தர்களும், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரும், சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகளும் இணைந்து கடற்கரைச் சுற்றாடலை தூய்மைப்படுத்தினார்கள்.

உலக சுற்றாடல் தினம் – 2025

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதும் தூய்மையானதுமான சுற்றாடலை உருவாக்கும் முயற்சியின் ஒருபகுதியாக மரநடுகை செயற்றிட்டமானது சபையின் செயலாளர் திரு செ.நிசான் அவர்களின் தலைமையில் 2025.06.05 அன்று காலை 10.00 மணியளவில் நகரசபை மைதானம் மற்றும் பொது மீன்சந்தைப்பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கணக்காளர், பொதுசுகாதாரப் பரிசோதகர், உள்ளுராட்சி உதவியாளர், பொலிஸ் அதிகாரிகள், சபையின் உத்தியோகத்தர்கள், மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


உலக சுற்றாடல் தினம் – 2025

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதும் தூய்மையானதுமான சுற்றாடலை உருவாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டுவருதல் என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நகராட்சி மன்றத்திற்குட்பட்ட மண்டுவில் பிரதேசத்தில் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை சேகரிக்கும் செயற்பாடானது சபையின் செயலாளர் திரு செ.நிசான் அவர்களின் தலைமையில் 2025.06.04 அன்று காலை 10.00 மணியளவில் செல்விநாயகர் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுசுகாதாரப் பரிசோதகர், உள்ளுராட்சி உதவியாளர், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர், சபையின் ஊழியர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சனசமூக நிலைய பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்துடன் கழிவுகளை சிறந்தமுறையில் முகாமைசெய்வது தொடர்பாகவும் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டதுடன் மரக்கன்றுகள் வளர்ப்பதற்கான பைகளும் பொதுமக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

கழிவுத்தொட்டிகளின் பாவனை

நகரத்தினை தூய்மைப்படுத்தும் நோக்கில் Save a Life நிறுவனத்தின் அனுசரணையுடன் உள்ளுராட்சி மன்றங்களிற்கு வழங்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் போத்தல்கள் சேகரிப்பிற்கான கழிவுத் தொட்டி சாவகச்சேரி பஸ்தரிப்பு நிலையம் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களாகிய நாம் இதன் மூலம் பிளாஸ்ரிக் போத்தல்களை பொதுஇடங்களில் வீசாது கழிவுதொட்டிகளில் இட்டு சூழலுக்கு நேயமாக செயற்படுவோமாக… 

நகரப்பூங்கா திறப்பு விழா

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட நகரப்பூங்கா பொதுமக்கள் பாவனைக்காக 2025.01.17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று திறந்துவைக்கப்பட்டது.

நகராட்சி மன்றின் செயலாளர் திரு. அ.சீராளன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், நகரப்பூங்காவிற்கு விளையாட்டு உபகரணங்களில் ஒரு தொகுதியினை நன்கொடையாக வழங்கிய தென்மராட்சி அபிவிருத்திக் கழகம், முன்னைநாள் சாவகச்சேரி நகர சபையின் உறுப்பினர் அமரர் யோகேஸ்வரன் ஜெயக்குமார் அவர்களின் குடும்பத்தினர், முன்பள்ளிச் சிறார்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சத்துணவுப் பொதிகள் வழங்குதல்

சாவகச்சேரி நகராட்சிமன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற வறுமைக்கோட்டின் கீழுள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மானியமாக சத்துணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வானது 2024.10.22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நகராட்சிமன்ற பொன்விழா மண்டபத்தில் மன்ற செயலாளர் திரு அ.சீராளன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து 50 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு தலா ரூபா 10,000.00 பெறுமதியான சத்துணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

முச்சக்கரவண்டிகளுக்கான ஸ்டிக்கர்

சாவகச்சேரி நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டணசேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையினை சாவகச்சேரி நகரசபையினர் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் இணைந்து 2024.09.10 செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளனர். 

நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டணசேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் உரிய ஸ்டிக்கரினை நகரசபை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், ஸ்டிக்கர் இல்லாத முச்சக்கரவண்டிகள் சபை எல்லைக்குள் சேவையில் ஈடுபடமுடியாது என்பதனை அறியத்தருகின்றோம்.

IMG-20240910-WA0010 (1)

 

தன்னியக்க மயமாக்கப்பட்ட நூலக சேவை

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட சாவகச்சேரி பொதுநூலகத்தின் நூலக சேவைகள் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் என்பன தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி  நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட உள்;ராட்சி சபைகளின் இயலளவு மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து தன்னியக்க மயமாக்கப்பட்டுள்ளது.

 

 

chavakachcheri.dlp.gov.lk என்ற இணையத்தள முகவரியில் பிரவேசிப்பதன் மூலம் இச்சேவையினை பெற்றுக்கொள்ளலாம். மேலும், வாசகர்கள் இச்செயலியில் உள்நுழைந்து சேவைகளைப் பெறுவதற்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் என்பவற்றை சாவகச்சேரி பொதுநூலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இத்துடன் கணனி மயப்படுத்தப்பட்ட நூல்கள் இரவல் வழங்கும் முறைமையும் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

நிறக்கழிவுக்கூடைகளின் பாவனை

நகரத்தினை தூய்மைப்படுத்தும் நோக்கில் நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை சிறந்தமுறையில் அகற்றுவதனை ஊக்கப்படுத்தும் முகமாக நிறக்கழிவுக்கூடைகள் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பஸ்தரிப்பு நிலையம் முன்பாக, தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக, டச்சு வீதி மற்றும் கண்டி வீதி போன்ற இடங்களில் இந்நிறக்கழிவுக்கூடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கழிவுகளை வீதிகளில் வீசாது சிறந்தமுறையில் அகற்றி சூழலுக்கு நேயமாக செயற்படுவோமாக… 

உலக சுற்றாடல் தின மரநடுகை நிகழ்ச்சித்திட்டம் – 2024

“பயனுறுதி மிக்க நிலப்பயன்பாட்டின் ஊடாக நலம் நிறைந்த நாடு” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்பட்ட சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மரநடுகை நிகழ்ச்சித்திட்டமானது சபையின் செயலாளர் திரு.அ.சீராளன் அவர்கள் தலைமையில் யூன் 05ஆம் திகதி சாவகச்சேரி நகராட்சிமன்ற பொது மைதானத்தில் நடைபெற்றது.  

IMG_20240605_093856334
IMG_20240605_093655115